நம்மை ஈன்று எடுத்து
நம்மை பாதுக்காத்து
நல் நிலமைக்கு கொண்டு வருவாள்
நாம் அவளை துன்புறுத்தி
சுயலாபத்திற்காக அவமானப்படுத்தி
முதியோர் விடுதியல் சேர்த்துவிட்டு
ஆனந்தம் காண்கிறோம் இக்காலத்தில்....
நம் தாயை போல தான்
பூமி தாயையும் நடத்துக்கிறோம்
அவளின் மண்வளத்தை
சுரண்டி, நச்சு மருந்துகளைத் தூவி
நம் சுயலப்திற்காக அவளையும் அழிக்கிறோம்...
அழித்துவிட்டு நாம் இயற்கையை பழிக்கிறோம்...
அழிப்பதும்,பழிப்பதும் மனிதர்களின்
இயல்பு என்றாலும் தாயை காக்க மறந்தவன்
உயிரற்ற பொருளை விட கீழ்த்தரமானவர்கள்
தான் நாம்..................................
- முரளிகிருஷ்ணன் சின்னதுரை
No comments:
Post a Comment